districts

img

ஐக்கிய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

வெள்ளையனே வெளியேறு’ தினமான ஆக 9 ஐ முன்னிட்டு ஐக்கிய விவசாயிகள்  முன்னணியினர், “கார்ப்பரேட் கொள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறு” என்ற முழக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியன்று காஞ்சிபுரம், காவலன் கேட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தவிச மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர்  கே.நேரு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.