திருவள்ளூர், டிச.25- தமிழ்நாடு - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நூதன போராட்டம். நடத்தினர். தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூரில் ஒருங்கி ணைந்த சோதனைச் சாவடி அமைந்துள்ளது. சென்னை யில் இருந்து ஆந்திரா வழி யாக வட மாநிலங்களுக்கும், வட மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கும் இந்த சோதனைச் சாவடி வழியாக பல்வேறு வகையாலான சரக்குகளை ஏற்றி கொண்டு நாளைதோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகனங் களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் வாங்கும் அதிகாரி களை கண்டித்தும், சோத னைச்சாவடி என்ற பெய ரில் மாமூல் வேட்டை நடத்து வதற்கு கண்டனம் தெரி வித்தும் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி உத்தரவிட்டும் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை அகற்றாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். லாரி ஓட்டுனரிடம் மாமூல் வசூலிக்கும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.