districts

சென்னையில் இன்று 11 மையங்களில் மறியல்

சென்னை, மார்ச் 27 - பொது வேலைநிறுத்தத்தையொட்டி சென்னையில் திங்களன்று (மார்ச் 28) 11 மையங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து மார்ச் 28, 29 தேதிகளில் பொது வேலைநிறுத்தம் செய்ய மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் இணைந்து அறைகூவல் விடுதுள்ளன. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறு வன ஊழியர்களும் பங்கேற்கின்றனர். தமிழ கத்தில் இந்த வேலைநிறுத்தத்துக்கு மாநில தொழிற்சங்கங்களும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. இதனையொட்டி சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 11 மையங்களில் மறியல் போராட்டம் நடை பெறுகிறது. தென்சென்னை மாவட்டம் கிண்டி அஞ்சலகம் முன்பு நடைபெறும் மறியலில் சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கலந்து கொள்கிறார். வட சென்னை பகுதியில் சட்டமன்ற தொகுதி வாரியாக 9 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் மறியலில் தொழிற்சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.