districts

img

திருவொற்றியூர் அரசுப் பள்ளிகளில் ரூ. 1 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

சென்னை, ஜன. 24- திருவொற்றியூர் அரசு பள்ளிகளில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை பெறும் வளர்ச்சிப் பணிக ளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வடசென்னை நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி முயற்சி யால் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து சிஎஸ்ஆர்நிதி பெற்று சென்னை மாந கராட்சியின் நமக்கு நாமே திட்டத்தில் 1 கோடியே 9 லட்சம் செலவில் ஜெய கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, கன்னியா குருகுலம் உயர் நிலைப் பள்ளி, பூந்தொட்ட  நடுநிலைப் பள்ளி, கத்தி வாக்கம் நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளியில் சிசிடிவி  கேமரா, ஸ்மார்ட் வகுப்பறை கள் மற்றும் சுற்றுச்சுவர் உயர்த்துதல், புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. இந்த கட்டுமான பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழா மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி தலைமையில் நடைபெற் றது. இதில் மண்டலக் குழு  தலைவர் தி.மு.தனியரசு, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வை.மா.  அருள்தாஸ், நிர்வாகிகள் கே.பி.சொக்கலிங்கம், ராஜா, மாமன்ற உறுப்பினர் கள் சுசீலா ராஜா, எம்.வி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.