districts

img

மாநகராட்சி பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

சென்னை, செப். 29 மாநகராட்சி பள்ளிகளை மூடும் நட வடிக்கையை கைவிட வேண்டும் என சிபிஎம் திருவிக நகர் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதி 24ஆவது மாநாடு பெரம்பூரில் தோழர் ஆர்.சூசைமேரி நினைவரங்கில் பி.கிருஷ்ணன் தலைமையில் ஞாயிறன்று (செப். 29) நடைபெற்றது. மூத்த தோழர் ஆர்.இளங்கோவன் கட்சிக் கொடியை ஏற்றினார்.    பகுதிக்குழு உறுப்பினர் பா.தேவி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பா.செல்வசிங் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் வேலை அறிக்கையையும், எஸ்.பூங்குழலி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜானகிராமன், கே.எஸ்.கார்த்தீஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக கே.சுரேஷ்  வரவேற்றார். என்.மோகன் நன்றி கூறினார். தீர்மானங்கள் உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டும்,  சமூக நலக்கூடங்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், அரசு பள்ளிகளை மேம்படுத்தி தரம் உயர்த்த வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தி மருத்துவர்கள், செவிலியர்களை  நியமிக்க வேண்டும், 73ஆவது வட்டத்தில் உள்ள எஸ்பிஆர் சிட்டி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 9 பேர் கொண்ட பகுதி குழுவின் செயலாளராக வி.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.