விழுப்புரம், செப். 24- விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ மனையில் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தை கள், மகப்பேறு, கண் அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவு கள் செயல்பட்டு வரு கிறது. ஒரு காலத்தில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதும் இங்கு விழுப்புரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான நோயா ளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது தவிர உள்நோயாளி களாகவும் பலர் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவ மனையில் உள்ள கட்டி டங்களை முறையாக பரா மரிக்காததால் சிதில மடைந்து வருகிறது. சில கட்டிடங்கள் சேத மடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை யில் உள்ளது. மேலும் மருத்துவமனை வளா கத்தில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்தை சுற்றிலும் முட்பு தர்கள் சூழ்ந்து தீவுபோல் காணப்படுகிறது. இதனால் மருத்துவமனை வளா கத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிக மாக உள்ளது. இதனால் இங்கு வரும் நோயாளி கள் அச்சப்படுகின்றனர். மேலும் மருத்துவமனை யின் பின்புற பகுதியில் மதில் சுவர் உடைந்து கிடப்ப தால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மருத்து வமனை வளாகத்திற்குள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படு கிறது. இதற்கு பயந்தே சிலர் உள்நோயாளிகளாக தங்கு வதற்கு தயக்கம் காட்டு கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மருத்துவமனை வளா கத்தில் சூழ்ந்திருக்கும் முட்புதர்களை அகற்றி, பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும், மதில் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.