districts

சென்னை முக்கிய செய்திகள்

6 வயது மகளை சீரழித்த கொடூரம் புரட்சி பாரதம் கட்சி தலைவர் கைது

சென்னை, ஆக. 24- வீட்டின் கழிவறையில் வைத்து 6 வயது  மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுச்சேரி மாநில புரட்சி பாரதம் கட்சித் தலை வரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் புரட்சி  ரவி (எ) புருஷோத்தமன் (45). இவர் புதுச்சேரி  மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலை வராக உள்ளார். பர்னிஷ் ஆயில் வியாபாரம் செய்கிறார். இவருக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி பிள்ளை கள் உள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக ரவி அங்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது 2ஆவது மனைவியுடன் புளியந்தோப்பில் வசிக்கிறார். இவர் களுக்கு 18 வயது மற்றும் 14 வயது மற்றும்  6 வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இதில் 3வது குழந்தை அதே பகுதியில் உள்ள  பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு  11 மணியளவில், எழும்பூர் அரசு குழந்தை கள் நல மருத்துவமனையில் புளியந்தோப் பில் இருந்து 6 வயது குழந்தை சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அவரது தலை யில் அடிபட்டு உள்ளது என தகவல் கிடைத் துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, கட்டிலில் இருந்து கீழே விழுந்து குழந்தைக்கு அடிபட்டுள்ளது என்றும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை  என்றும் ரவி தெரிவித்துள்ளார். அதன்பிறகு வெள்ளிக்கிழமை 7 மணியளவில், எழும்பூர்  குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் சரோஜினியை தொடர்பு கொண்டு, குழந்தையின் உடம்பிலும், பிறப்புறுப்பில் காயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர் எழும்பூர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது குழந்தையின் தாய் எனது மகள் வெளியே செல்லவில்லை. வீட்டில் எனது கணவர் மட்டும் தான் உள்ளார்.  வேறு ஆண் நபர்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதனால் தந்தை ரவி மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோபம் அடைந்த ரவி, ‘நான் ஒரு கட்சியில் பெரிய  பொறுப்பில் இருக்கிறேன். என்னையே சந்தேகப்படுகிறீர்களா’ என்று கடும் வாக்கு வாதம் செய்துள்ளார். பின்னர் அவரை காவல்  நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, தனது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். அவர்  குழந்தையை வீட்டில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் குழந்தை வெளியே ஓடி வரும்போது கீழே  விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. உடலில்  பல இடங்களில் காயங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

“குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் இல்லை” : அமைச்சர்

சென்னை, ஆக.24-  திமுக அரசு, இதுவரை 15 லட்சத்து 94 ஆயிரத்து 321  புதிய குடும்ப அட்டைகள் வழங்கியுள்ளது என்று உணவுப்  பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான பயனாளிகளின் குடும்ப அட்டை அடிப்படையாகக் கொண்டு கணக் கெடுக்கப்பட்டது. இதனால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மாறுபடாமல் 6.7.2023 முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் ஏற்கனவே அச்சடிக்கும் நிலையிலிருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனாலும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 17,197 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அதேபோன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங் களில் 10,380 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. 2024 மார்ச் மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் மக்களவைத் தேர்தல் நடைமுறைகள் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்த பின்  கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும்  பணி முடுக்கிவிடப்பட்டன. இதுவரை பெறப்பட்ட 2 லட்சத்து 89 ஆயிரத்து 591  விண்ணப்பங்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 458 புதிய  குடும்ப அட்டை விண்ணப்பங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 92,650 விண்ணப்பங்கள் ஒப்புதலளிக்கப் பட்டுள்ளன. இவற்றில் 24,657 விண்ணப்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங் களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகிறது. மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தொடர்ந்து கள விசாரணையும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியை விரைந்து நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.