districts

வரி, வாடகை பாக்கி நிலுவை: வளர்ச்சிப் பணியில் திணறும் விழுப்புரம் நகராட்சி

விழுப்புரம், பிப்.10- வரி வசூலில் தமிழ்நாட்டில் விழுப்புரம் நகராட்சி 135ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.  விழுப்புரம் நகராட்சியில்  42 வார்டு கள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சொத்துவரி, குடிநீர் இணைப்பு கட்டணம், காலி மனை வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் உள்ளிட்ட வரிகளின் மூலம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், மக்களுக்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வரி இனங்கள், வாடகை பாக்கி என நகராட்சிக்கு ரூ.17 கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. இதில் வரிவசூலில் விழுப்புரம் நகராட்சி 135ஆவது இடத்தில் உள்ளது. மண்டல அளவில் 22 நகராட்சி களில் 21ஆவது இடத்தில் இருக்கிறது. நகராட்சிகுட்பட்ட 42 வார்டு களிலும் மொத்தமாக 11,391 குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில் ரூ.2.18 கோடி வரிபாக்கி உள்ளது. அதேபோல் பாதாள சாக்கடை இணைப்புகள் மொத்தம் 6,024 உள்ள நிலையில் ரூ.1 கோடியே 67 லட்சம் வரிபாக்கி உள்ளது. இந்த வரியை விரைந்து கட்ட வலி யுறுத்தியும், தவறினால் இணைப்பு கள் துண்டிக்கப்படும் என்றும் நக ராட்சி நிர்வாகம் சார்பில் பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறித்த காலத்திற்குள் உரிய கட்ட ணத்தை செலுத்தாததால் கடந்த சில நாட்களில் மட்டும் 130 குடிநீர் இணைப்புகளும், 145 பாதாள சாக்கடை இணைப்புகளும் துண்டிக்கப் பட்டுள்ளன. அதேபோல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை பாக்கியை செலுத்தாமல் இருக்கும் கடைகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைக்கின்றனர்.   வரிவசூலில் விழுப்புரம் நகராட்சி பின்தங்கிய நிலையில் இருப்பதால் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் விழுப்புரம் நகராட்சி திணறி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நகராட்சியில் வரி பாக்கியை முழுமையாக வசூலிக்க நகராட்சி அலுவலர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.