districts

img

தமிழ்நாடு சைக்கிள் பந்தய லீக்: திருபெரும்புதூரில் இன்று இறுதிச்சுற்று

சென்னை, நவ.19-  தமிழ்நாடு சைக்கிள் பந்தய லீக்  போட்டியின் இறுதி சுற்று ஞாயிற்றுக் கிழமை திருபெரும்புதூர் அருகே உள்ள  இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற வுள்ளது. அங்குள்ள மோட்டார் பந்தய ஓடு தளத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் பங்கேற்கின்றன -  சென்னையில் இருந்து நம்ம சென்னை  ரைடர்ஸ் மற்றும் மெட்ராஸ் புரோ ரேசர்ஸ் ஆகிய இரு அணிகளும், கோவையில் இருந்து கோவை பெடல்ஸ், மதுரையில் இருந்து மதுரை மாஸ் ரைடர்ஸ், திருச்சி - திருச்சி ராக் ஃபோர்ட், சேலம் - சேலம்  சூப்பர் ரைடர்ஸ், கன்னியாகுமரி - குமரி  ரைடர்ஸ் மற்றும் வேலூர் - ரான்சிசர்ஸ் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடை பெற்ற முதல் கட்ட போட்டியில்  வேலூர் ரான்சிசர்ஸ் முதலாவது இடத்தை பிடித்தது.   போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி கட்டம் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு ஆதரவுடன் அண்ணாநகர் சைக்கிள்ஸ் மற்றும் பிராண்ட் பிளிட்ஸ் ஆகியவை இந்த  போட்டியை நடத்துகின்றன. தமிழ்நாட்டில் நடத்தப்படும் முதல் சைக்கிள் லீக்  இதுவாகும். முதல் மற்றும் இரண்டாவது சுற்றி அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.3 லட்சமும் சாம்பியன் கோப்பையும் வழங்கப்படும். 2வது பரிசாக ரூ.2லட்சமும் 3வது பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.