தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு சுவர் திரையை மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலட்சுமி திறந்து வைத்தார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் மா. சுனில் குமார். மண்டலக் குழு தலைவர்கள் புஷ்பலதா வன்னியராஜா, ஆர். நரேந்திரன், கே.யூசுப்கான், எஸ். வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் யு. நாகராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் த.ஜெ. ராஜபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.