அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கான முழு தொகையை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் காலி சிலிண்டருடன் மாவட்ட துணைத்தலைவர் ஜீவ கீதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கஜலட்சுமி சிஐடியு மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.