districts

img

மாதவரம், மணலி, திருவொற்றியூருக்கு புழல் ஏரியில் இருந்து குடிநீர் விநியோகம்

சென்னை, செப். 11- சென்னை மாதவரம், மணலி, திருவொற்றியூ ருக்கு செப் 13 முதல்  புழல்ஏரியில் இருந்து குடி நீர் விநியோகம் செய்யப் படஉள்ளது.மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லி யன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலை யத்தில்பராமரிப்பு பணிகள் வருகிற 13-ந் தேதி காலை 6 மணி முதல் 15-ந் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.எனவே, மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர்,கத்திவாக்கம், பட்டேல்நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்இருந்து குடி நீர் வழங்கப்படும். மேலும்,பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டியஅளவு குடி நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறி வுறுத்தப்படுகிறார்கள். மேலும்,அவசரத் தேவை களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். திருவொற்றியூர், எர்ணா வூர், கத்திவாக்கம் பகுதி மக்கள் 8144930901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மணலி பகுதி மக்கள் 8144930902 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம். மாதவரம் பகுதி மக்கள் 8144930903 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம். பட்டேல் நகர், வியாசர்பாடி பகுதி மக்கள் 8144930904 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம். சிந்தா திரிப்பேட்டை தலைமை அலுவலக எண்களான 044-2845 1300, 044-4567 4567லும்   புகார் செய்யலாம்.

;