districts

img

தெப்பக்குளமாக மாறிய பள்ளி வளாகம்

ராணிப்பேட்டை, ஆக. 12 – அரக்கோணம் அடுத்த மோசூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் தொடர் மழை காரணமாக பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியதால் மாணவர்களும், பெற்றோர்களும் திங்களன்று (ஆக. 12) சாலை மறியலில் ஈடுபட்டு அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.  பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நிலைமையை உணர்ந்து உயர் அதிகாரியுடன் கலந்து ஆலோசனை செய்து பள்ளிக்கு விடுமுறை அளித்தார். இந்நிலையில் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் ஆத்திரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.   தகவல் அறிந்து அரக்கோணம் வட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி  மற்றும் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்கு மண்ணை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தார். அதன்பேரில் தற்காலிகமாக மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.