districts

img

இளையோர் சிறைக்கு வருவதை தடுக்க “பறவை’’ திட்டம்

சென்னை, மார்ச் 29- இளம் தலைமுறையினர் சிறைக்கு மீண்டும் மீண்டும் வருவதை தடுக்கவே  பறவை திட்டம் உதவும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிர காஷ் கூறியுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூர்நோக்கு இல்லங்க ளில் இருக்கும் சிறார்களின் மறுவாழ்வி ற்கு வழிவகுக்கும் ‘பறவை’ எனும் திட்டத்தை தொடங்கிவைத்துப்பேசிய அவர், நாட்டில் 20 விழுக்காடு இளம்  தலைமுறையினர் உள்ளனர்.  10  ஆண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை  நீதிமன்றத்தை முன் மாதிரியாக எடுத்துக்  கொண்டு முதல் தடவை கைது செய்யப்படும் 18 முதல் 24 வயது உடைய வர்களை கிளைச் சிறையில் அடைக்க  வேண்டும் என உத்தரவு வாங்கினோம்.  அவர்களில் 2,904 பேருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் 69 பேர் மட்டுமே  இரண்டாம் முறையாக குற்ற வழக்கு களில் சிக்கினார்கள். எனவே கவுன்சி லிங் பெரிய அளவில் பயனளித்தது. மீண்டும், மீண்டும் சிறைக்கு வருப வர்களை தடுக்கவே பறவை என்ற இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்.  

இந்த திட்டத்தை முழுமையாக செய லாக்க, ஐபிஎஸ், ஐ.ஏ.எஸ் தேவை யில்லை. தலைமைக்காவலர் தான் தேவை. அவர்தான் இந்த திட்டத்தில் முதன்மையானவர், காவலர் ஒரு மனிதரை வாழவும் வைக்க முடியும், வீழவும் வைக்க முடியும். இந்த பறவை திட்டம், சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  சென்னைபெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், பறவை திட்டத்தை வடிவமைப்பதற்கு முன்பாக இளம் சிறார் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டது. அதில் சமூக பொரு ளாதாரத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளிலிருந்து வரும் குழந்தைகள் சுலபமாக குற்றச் செயல்களில் ஈடுபடு வது கண்டறியப்பட்டது. இந்த குழந்தைகள் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதற்காக சென்னை காவல் துறை சார்பில் பாய்ஸ்,  இளம் பெண்கள் கிளப்புகள் தொடங்கப் பட்டன. இந்த பாய்ஸ் அண்ட் இளம் பெண்கள் கிளப்புகள் மூலம் அந்த குழந்தைகளுக்கு தேவையான வழி காட்டுதல்கள் மற்றும் கவுன்சிலிங்குகள் வழங்கப்படுகின்றன என்றார்.