districts

img

ஆவடியில் 14 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

அம்பத்தூர், டிச.1- ஆவடி மாநகராட்சியில் 14 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி, திரு முல்லைவாயில், பட்டா பிராம், முத்தாபுதுப் பேட்டை, மிட்டனமல்லி, கோயில்பதாகை, அண்ண னூர் உள்ளிட்ட 14 இடங்க ளில் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதில் காய்ச்சல் சளி, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரி சோதனைகளை தலா 14 மருத்துவர்கள்,  செவிலி யர்கள் செய்தனர். முகாம்களை மாநக ராட்சி ஆணையர் எஸ்.கந்தசாமி, மாநகர் நல அலுவலர் வீ.ராஜேந்திரன், துப்புரவு அலுவலர்கள் முகைதீன், குமார் ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.