districts

img

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, ஆக.8- சென்னையில்  வெள்ளிக் கிழமை (ஆக 9) முதல் மூன்று நாட்கள் தமிழ கம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கும்பகோணம், கோவை, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்க ளுக்கு வெள்ளிக்கிழமை அன்று 275 பேருந்து களும்  சனிக்கிழமை 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலை யத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும் சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதுமட்டும் இல்லாமல் பெங்களூரு திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதி களிலிருந்து பல்வேறு பகுதி களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து வெள்ளி அன்று 20 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது தொடர்ந்து ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் போது மக்களின் வசதிக்காக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டணி எரிசலை தவிர்த்து சிரமம் இன்றி பயணம் செய்ய www.tnstc.in மற்றும் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக  அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஓர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.