வண்டலூரில் விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு
சென்னை, ஏப்.29- வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயிலின் தாக்கத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் விலங்குகளுக்கு கொடுக்கின்றனர். பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி சணல் கோணி கட்டப்பட்டு அவைகளுக்கும் கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று காண்டாமிருகம், சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர். அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்ட உணவகங்கள், நிழற்குடைகள் என்று பார்வையாளர்களுக்கும் கோடை காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.
கடைகள், வீடுகள் இடிப்பு
சென்னை, ஏப்.29- செங்குன்றம்-அம்பத் தூர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தாக வந்த புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறை, அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல பணி யாளர்கள் ஆகியோர் சட்டம் ஒழுங்கு காவலர்களின் பாதுகாப்புடன் அம்பத்தூ ரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற் றும் பணியில் ஈடுபட்டனர். அம்பத்தூர் தனியார் திரையரங்கம் முதல் ஒரகடம், அம்பேத்கர் சிலை, புதூர், கள்ளிக்குப்பம் வரை யிலான சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்த மான இடங்களிலும், மழை நீர் கால்வாய் உள்ள இடங்க ளிலும் ஆக்கிரமித்து கட்டப் பட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொது மக்கள் மற்றும் கடையின் உரி மையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர்பாபு
சென்னை,ஏப்.29- சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்க ளுக்கு செல்லும் பேருந்துகளை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலைய பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில் பேருந்து நிலையத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி யில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ. 393.74 கோடியில் புதிய பேருந்து முனையம் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜூன் மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட தயாராக உள்ளது” என்றார். இம்முனையத்தில் புறநகர் பேருந்து களுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் புறநகர் பேருந்து களுக்காக தனி பணிமனை உள்ளது. இப்பேருந்து இம்முனையத்தில் மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பள வில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளது. தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள். கழி வறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த ஆய்வின்போது வீட்டு வசதிதுறை மற்றும் நகர்ப்புற துறை செயலாளர் அபூர்வா, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய துணைத் தலைவர் வி.எஸ். ஆராவமுதன், ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் ஆகியோர் உடனிருந்ததனர்.
குடிநீர் கேட்டு மறியல்
ஜோலார்பேட்டை, ஏப். 29- வாணியம்பாடியில் இருந்து சேலம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் அடிக்கடி தடைப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சந்தைகோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு, அப்பாசி கவுன் தெரு ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஒன்னரை வருடங்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சனிக்கிழமை காலை ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி, காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
விபத்தில் வாலிபர் பலி
திருவண்ணாமலை, ஏப். 29- திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஜடேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (24). இவரது நண்பர் மணிகண்டன். இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பனங்காடு கிராமம் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பேருந்து விஜய் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் விஜய், மணிகண்டன் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை விஜய் உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தூசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
கடலூர், ஏப். 29- கடலூர் மாவட்டம், ஓட்டேரியைச் சேர்ந்தவர் மதன் (36). இவரது மனைவி வீரலட்சுமி (35). இருவரும் ஓட்டேரி பகுதியில் உள்ள மாட்டு பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேடை பேச்சாளர்களுக்கும் கலைமாமணி விருது: புதுவை முதல்வர்
புதுச்சேரி, ஏப்.29- புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா கம்பன் கலை அரங்கத்தில் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெற்றது. விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன், முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார் அரசுச் செயலர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் விருதுகள் பெற்ற கலைஞர்களை பாராட்டி பேசிய முதல்வர் ரங்கசாமி, “ இனி மேடைபேச்சாளர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும்”என்றார். இலக்கியம், இசை, நாடகம், ஓவியம், நடனம், சிற்பம், நாட்டுப்புற கலை முதலிய துறைகளில் சிறப்புற்று விளங்கும் கலைஞர்களைப் பாராட்டும் வகையில், புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கலைமாமணி விருதுகள் 1997ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெரும் கலைஞர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.50,000 மும், சான்றும் வழங்கப்படுகிறது. தற்போது 9 ஆண்டுகளுக்கான விருது 2013 முதல் 2021 வரை மொத்தமாக 216 அறிஞர் பெருமக்களுக்கு கலைமாமணி விருதுகள் விழாவில் வழங்கப்பட்டது.
மின்னல் தாக்கி இருவர் பலி
திருவண்ணாமலை, ஏப்.29- திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில், தண்டராம்பட்டு அடுத்த வாக்கிலாபட்டு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ் (26) நிலத்தில் விவசாய பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது, பலத்த மின்ன லுடன் கூடிய மழை பெய்ததில், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி யானார். நிலத்திற்கு சென்ற மகன் வரவில்லை என அவரது தந்தை வேலு, மகனை தேடி சென்றபோது தான் இந்த தகவல் தெரியவந்தது. இதேபோன்று, தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு பகுதியை சேர்ந்த வர் முனுசாமி (50)நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியா னார். இரு சம்பவம் குறித்து வாணாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை
புதுவை அரசுக்கு மாதர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி, ஏப். 29- மத அடையாளத்துடன் பாகு பாட்டை உருவாக்கக்கூடிய பிற்போக்குத்தனமான அறிவிப்பை உடனடியாக புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் டி.ஜி.முனியம்மாள், செயலாளர் அ.இளவரசி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் உத்தர வான அரசு துறையில் பணியாற்று கின்ற பெண்களுக்கு மாதம் மூன்று வெள்ளிக்கிழமை பூஜை செய்வதற்காக 2 மணி நேர அனுமதி வழங்கியுள்ளதை திரும்பப் பெற்று, அதற்கு பதிலாக பெண்களின் மாத விடாய் காலத்திற்கு விடுப்பு வழங்க வேண்டும். காலங்காலமாக கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து சமூக பங்களிப்புகளில் இருந்தும் ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு வந்த பெண்கள் தற்போது தான் படித்து முன்னேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலைக்கு வருவதற்கே பல நூற்றாண்டுகளாக போராடித்தான் வந்துள்ளார்கள். இன்னமும் சமத்துவத்தை நோக்கி போராட வேண்டியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பானது பெண்களை மீண்டும் வீட்டுக்குள் அடைக்கும் விதமாகவும், பூஜை செய்வதை திணிக்கும் விதமாகவும் ஆணாதிக்க சிந்தனையுடன், ஒரு மத அடையாளத்துடன் பாகு பாட்டை உருவாக்கக்கூடிய பிற்போக்குத்தனமான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும், பெண்களின் மாத விடாய் காலம் எவ்வளவு வலி யும் வேதனையும் மிக்கது என்று அனைவரும் அறிவார்கள். புதுவை யில் அதிகப்படியான பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். உண்மையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு பெண்கள் மீது அக்கறை இருந்தால் கேரளா அரசை போல் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி யாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கபட நாடகம்: சிபிஎம் குற்றச்சாட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு மாதத்தில் 3 வெள்ளிக் கிழமையில் இரண்டு மணி நேர பணி சலுகை செயல்படுத்த உள்ள தாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கோரிக்கையை ஏற்று முதல்வர் தான் அனுப்பியுள்ள பெண்கள் வேலை நேர கோப்பில் கையெழுத்து இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது தனது முயற்சியில் பெண்கள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். துணை நிலை ஆளுநரின் அறிவிப்பு சட்டபூர்வமானதா? அரசு துறைகள் அனைத்திற்கும் பொருந்துமா? தனியார் துறைகளுக்கு விரிவுபடுத்த என்ன திட்டம் என்பதில் தெளிவில்லை. அவசர கதியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் பணிச் சூழலில் பாரம்பரிய வழிபாடு மற்றும் பூஜை களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் இரண்டு மணி நேர முன் அனுமதி என்பது பெண்கள் நலன் சார்ந்ததாக அமையவில்லை. இது உள்நோக்கம் கொண்ட அரசியல் கபடநாடக அறி விப்பாகும். எனவே மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ள அர சாணையை ரத்து செய்து பெண்க ளுக்கு வேலை நேரத்தை 6 மணி நேரமாக அரசு மற்றும் தனியார் துறை களில் அமல்படுத்த வேண்டும். மக்கள் ஒற்றுமையை சிதைக்கும், மத வாத நிகழ்ச்சி நிரலுக்கு மாநிலத்தில் இடம் அளிக்கக்கூடாது” என்று தெரி வித்திருக்கிறார்.