சென்னை, மே 30 - மக்கள் பிரச்சனைகளை எளிதாக தீர்க்க துறைகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். திங்களன்று (மே 30) ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நடை பெற்ற மாமன்றக் கூட்டத்தில் நேர மில்லா நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர்கள், தங்களை அதிகாரி கள் மதிப்பதில்லை. சிறு பணிகளை கூட விரைந்து முடிக்காமல் அமைதியாக இருக்கின்றனர் என்று சரமாரியாக புகார் தெரிவித்தனர். கழிவு நீர் அகற்று வாரியம், குடிசைமாற்று வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளை மாநகராட்சி மன்றக் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். மன்ற உறுப்பினர்கள் கூறும் சிறுசிறு பணிகளை உதவி பொறியாளர்கள் விரைந்து செய்ய 2 லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும். அம்மா கலையரங்கத்தின் வாடகையை குறைப்பதோடு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் வகையில் அதன் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து விரைவில் கூட்டம் நடத்தப்படும் என்றார்.
ஆக்கிரமிப்பு எனும் அபத்தம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் அம்பேத்வளவன் குறிப்பிடுகையில், “ஆக்கிரமிப்பு களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடு கிறது. கோயம்பேடு பகுதியில் கரையோரம் உள்ள அடுக்குமாடி வீடுகள், ஓட்டல்களை இடிக்க புல்டோசர்கள் செல்வதில்லை. 48 மாடி கட்டிடம் கட்டும் ஒரு தனியார் நிறுவனம் ஒரு சாலையை ஆக்கிரமித்து 2 வருடமாக வைத்துள்ளது. அங்கெல்லாம் அதி காரிகள் சென்று கூட பார்ப் பதில்லை. ஆனால் எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் சாலையின் இரு புறத்தையும் அடைத்துவிட்டு புல்டோ சரை வைத்து இடிப்பது நியாய மில்லை? ஆக்கிரமிப்பு என்ற சொல்லே அபத்தமானது என்றார்
கட்டிடம்
600 சதுர அடி பரப்பில் வீடு கட்டி னால் கூட சுற்றி 5 அடி அகலம் இடம் (செட்ஃபேக்) விடவில்லை என்று நோட்டீஸ் கொடுக்கின்றனர். 2400 சதுர அடிக்கு குறைவான வீடுகளுக்கு திட்ட அனுமதி தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும். அதற்கு மாறாக, ஒரு அபராத தொகையை விதிக்கலாம் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். மழைநீர் வடிகால்வாய் பணி களை பூகோள ரீதியாக ஆய்வு செய்து திட்டத்தை வடிவமைக்கா மல், அதிகாரிகள் விருப்பத்திற்கு செய்கிறார்கள். மாமன்ற உறுப்பி னர்களின் கருத்துக்களை பரிசீலிக் கவே மறுக்கிறார்கள். ஆங்காங்கே கால்வாய்களை தோண்டிவிட்டு, வேலைகளை செய்யாமல் உள்ளனர். இதனால், மழைக்காலத்தில் கடும் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். கழிவுநீர் கட்டமைப்பும் போதுமான தாக இல்லை என்றும் உறுப்பினர் கள் கூறினர். இதற்கு பதிலளித்த ஆணையர், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமை யாளர்களே ஒரு ஏ4 காகிதத்தில் சுயமாக ஒரு வரைபடம் வரைந்து தாக்கல் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. விரைவில் அதனை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றார். இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்தால் உடனடியாக தனது கவனத்திற்கு கொண்டு வருமாறும் மன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.
மேம்பாலம்
இந்தக் கூட்டத்தில் பேசிய மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சொத்துவரியை பொது மக்கள் பாதிக்காத வகையில் உயர்த்த வேண்டும். போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க வட பெரும்பாக்கம், கொசஸ்த்தலை யாறு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் தார்.