districts

img

மாதிரி முதியோர் இல்லம்

சென்னை, மே 31- காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல் கழனி கிராமத்தில் மாதிரி முதியோர் இல்லத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக மாநில  சமூக நலத்துறை அமைச் சர் கீதா ஜீவன் தெரிவித் துள்ளார். சென்னை பல்லா வரத்தில் டீமென்ஷியாவால்  (மறதி) பாதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அதுல்யா சீனியர் கேர் என்ற பராமரிமரிப்பு மையத்தை துவக்கிவைத்து பேசிய அவர், இனி யார் முதியோர் இல்லம் தொடங்கினாலும் அவர்கள் இதே வசதி களுடன் அமைக்கும் வகை யில் மாதிரி இல்லம் அமை யும் என்றார். இந்த இல்லத் திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரி வித்தார். முதியோர் நடப்பதற்கு வசதிகள், அவர்களுக்கு ஏற்ற வகையில் தரை கள். அவர்களுக்கு பிடித்த  வண்ணங்களில் சுவர் அலங்காரம் கலந் துரையாடல் மையம் இடம் பெறும் என்றார். திமுக  ஆட்சிக்கு வந்தபின்னர் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், ஆதர வற்றோர் காப்பகம் ஆகிய வற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய விதி களின் படி செயல்படாத இல்லங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு மூடப்பட்டது. மாநிலத்தில் 89 குழந்தைகள் இல்லங்கள் மூடப்பட்டதாகவும் அவர் கூறினார். மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கான பராமரிப்பு சேவையும் அதிகரிக்கவேண்டியது அவசியம் என்று  அமைச்சர் குறிப்பிட்டார். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாநில அரசின்  இல்லம் தேடி மருத் துவம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என்றும் படுத்த படுக்கை யில் உள்ள  முதியோர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வில்   அதுல்யா சீனியர் கேர் நிறுவனர் ஜி. சீனிவாசன், தலைமை நிர்வாக அதிகாரி; டாக்டர் கார்த்திக் நாராயண், இணை  நிறுவனர் காவ்யா உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.