districts

சிறப்பாக பணிபுரிந்த மருத்துவருக்கு கேடயம்

வேலூர், ஜூலை 5-

    மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவருக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கேடயங்களை வழங்கினார்.  

    அவர் பேசுகையில், “மருத்துவர்க ளுக்கு சமூகத்தில் முக்கிய பங்கு உண்டு. நோயாளிகளின் நல்வாழ்வுக் காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். நோயுற்ற நிலையில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறார்கள். நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவு கிறார்கள்.

    மேலும், மருத்துவ அறிவியலை நன்கு புரிந்து கொண்டு நோயாளிகளின் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் தங்கள் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்”என்றார்.