ஆரணி, டிச. 30 - தமிழக தொழிலாளர் ஆணையர் அப்துல் ஆனந்த் உத்தரவின்படி வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் தி.புனிதவதி வழிகாட்டுதலின் படியும் திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சி.மீனாட்சி தலைமையில் ஆரணியில் காந்தி ரோடு, மார்க்கெட் சாலை யில் உள்ள மளிகைக் கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகள் ஆய்வு செய்யப் ்பட்டன.அப்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் 36, மேசை தராசு கள் 11, எடைக்கற்கள் 9, நீட்டல் அளவைகள் 5, ஊற்றல் அளவை கள் 3 என ஆக மொத்தம் 64 தராசுகளை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இதுகுறித்து உதவி ஆணையர் சி.மீனாட்சி கூறுகையில், வணிகர்கள் பயன்படுத்தும் தராசுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடாமல் பயன்ப டுத்துவது கண்டறியப்பட்டால் ரூ. 5,000 அபராதம் விதிக் ்கப்படும். முத்திரையிட்டு அதற்கான சான்றிதழ் பார்வையில் தெரியும்படி வைக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.