districts

img

சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள் விழா

நாமக்கல், ஜன.4- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலேவின் பிறந்தநாள் விழா குமாரபாளையம் அருகே கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கலைமகள் வீதி யில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய்  பூலேவின் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் பவுண்டே சன் சார்பில் கொண்டாடபட்டது. அப்போது, சாவித்திரி பூலே வின் உருவப்படத்திற்கு தலைமையாசிரியர் சுகந்தி மலர் மாலை அணிவித்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டி வைக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், எலந்த குட்டை மருத்துவ அலுவலர் சையத் முகமத் ஆதில்ஷா, விடி யல் பிரகாஷ், ஆசிரியர் ஹெலன், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.