திருவள்ளூர், ஜூன் 18-
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறுக்கு மட்டும் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு பின்புறம், மருத்துவமனை முழுவதும் சேக ரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவு கள் அங்கு குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் கழிவு கள், மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச கழிவுகள் உள்ளிட்டவற்றை பணி யாளர்கள் ஆங்காங்கே கொட்டுவதால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசு வதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் நக ரத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் மருத்துவ கழிவு களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.