districts

img

மூன்று தலைமுறைகளாக வசிக்கும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு

திருவண்ணாமலை, ஆக.22-

     திருவண்ணாமலை அருகே 3 தலைமுறைகளாக வசித்து வரும் மக்களின் வீடுகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ் நாச்சிப் பட்டு கிராம அரசு புறம்போக்கு நிலத் தில், மூன்றாவது தலை முறையாக 70 குடும்பம் வசித்து வருகிறது. தற்போது,  நீதிமன்ற உத்த ரவு காரணமாக அந்த வீடு களை இடிப்பதற்கு திரு வண்ணாமலை வட்டாட்சி யர் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

     நாங்கள், இந்த இடத் தில் மூன்றாவது தலை முறையாக வசித்து வருகி றோம். இந்த வீடுகளை இடித்து விட்டால் வாழ் வதற்கு வேறு இடமும் வழி யும் இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.