districts

img

கோவில் நிலங்களில் வசிப்போருக்கு அநியாயமாக உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்யக்கோரி மனு அளித்து வருகின்றனர்

கோவில் நிலங்களில் வசிப்போருக்கு அநியாயமாக உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள்  குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் சட்டமன்ற உறுப்பி னர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியை சந்தித்து, தென்சென்னை மாவட்ட செயலாளர் எம்.நடராஜன் சந்தித்து மனு  அளித்தார். உடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் பல்லாவரம் பகுதி தலைவர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.