districts

img

மாடம்பாக்கம் ஏரியை பாதுகாக்க பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்

சென்னை, செப். 21 - மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வலி யுறுத்தினர். மாடம்பாக்கம் ஏரி 256 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கழிவுநீர் கலந்து பாழடைந்துள்ள ஏரியை மீட்டெடுத்து பாதுகாக்கும் வகை யில், சனிக்கிழமையன்று (செப் 21) குடியிருப்போர் சங்கங்களின் கலந்துரை யாடல் நடைபெற்றது. நிகழ்வை தொடங்கி வைத்து சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன், துணைச் செயலாளர் எம்.தங்கராஜ் பேசுகையில், கால நிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மக்களும், சுற்றுச்சூழல் அறிஞர்களும் கலந்துரையாடி, ஏரியை பாதுகாக்கும் நட வடிக்கைகளை மேற்கொள்ள கலந்துரை யாடலை நடத்துவதாக குறிப்பிட்டனர். சென்னை ஐஐடி சுற்றுச்சூழல் பேராசிரி யர் இந்துமதி எம்.நம்பி பேசுகையில் “மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலந்து ஆக்சிஜன் அளவு குறைந்து, பொட்டாசியம், பாஸ்பேட் அளவுஅதிகமாக உள்ளது. இதனால் ஆகாய தாமரை வளர்கிறது. நிலத்தடி நீர், நீர்வாழ் உயிரினங்கள், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது” என்றார். “நமது ஏரி என்ற உணர்வோடு குடியிருப்புவாசிகள் இருக்க வேண்டும்” என்று கடல் உயிரியி லாளர் நாராயணி சுப்பிரமணியன் அறி வுறுத்தினார். இந்நிகழ்வில் பேசிய குடியிருப்போர் பேசுகையில், “ஏரிக்கு வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை அரசு பாதுகாக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்,  மழைநீர் கால்வாய் என தனித்தனியாக இல்லை. இதனால் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை மக்கள் விடுகின்றனர். இதனை தடுக்க பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி யில் புதிய ஏரிகளை உருவாக்க சாத்திய மில்லை. புறநகர்ப்பகுதியில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஏராளமான ஏரிகள் உள்ளன. ஒரு ஏரியை மட்டுமல்ல, அனைத்து ஏரிகளையும் மீட்டெடுத்து அரசு பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.