இ-சேவை மையம் இடமாற்றம்: பொதுமக்கள் அவதி
சென்னை,அக்.7- திருவொற்றியூர் சாத்துமாநகரில் இடம் மாற்றப்பட்ட இ-சேவை மையத்தால் 3 கிமீ தூரம் சென்று மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவொற்றியூர் மண்டலம், 13வது வார்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்க ளுக்கு பயன்படும் வகையில் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு சாத்துமா நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பிரதான சாலையில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் இ-சேவை மையத்திற்குச் சென்று வரும்போது மிகவும் சிரமப்படுகின் றனர். இதையடுத்து இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட இ-சேவை மையத்தை மீண்டும் 13வது வார்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று வார்டு கவுன்சிலர் சுசீலாராஜா, திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
வாலாஜாபாத், அக்.7- வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் முழு துப்புரவு முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை பணியாளர்கள், தனியார் பொறி யியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு பேரூராட்சி மன்ற கவுன்சிலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் முகாமை தொடங்கி வைத்தார். நான்கா வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். சாலையையொட்டி வளர்ந் துள்ள செடி, கொடிகளை அகற்றினர். சாலை யின் இரு புறமும் உள்ள கால்வாய்களை தூர் வாரும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இலவச கண் பரிசோதனை முகாம்
சென்னை, அக். 7- ஆண்டுதோறும் அக்டோ பர் 10-ந்தேதி உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படு கிறது. இதனையொட்டி பெரும் பாக்கத்தில் உள்ள கிளெனீ கல்ஸ் மருத்துவமனை சார்பில் சென்னையில் அக்டோபர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாள் இலவச கண் பரி சோதனை முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு இம்மருத் துவமனையின் டாக்டர் ரவீந்திர மோகன் தலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்க (044) 4477 7000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவேண்டும். இதில் விரைவான பார்வை சோதனை மற்றும் டோனோமீட்டரைப் பயன் படுத்தி கண் அழுத்தத்தை அளவிடுதல் ஆகிய பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கண் பரிசோ தனை அனுபவம் வாய்ந்த கண் பரிசோதனை நிபுணர் களால் குறைந்தபட்சம் 2 நிமிடம் அல்லது அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை செய் திக்குறிப்பு தெரிவிக்கிறது.