districts

img

மணலி விரைவுச் சாலையில் உள்ள கன்டெய்னர் ஆக்கிரமிப்பை தடுத்திடுக!

சென்னை,ஜன.30 - மணலி விரைவுச்சாலை யில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள கன்டெய்னர் லாரிகளை அகற்ற வேண்டும் என்று 4வது வார்டு உறுப்பினர் ஆர். ஜெயராமன் வலியுறுத்தி னார். சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் கேள்வி நேரத்தில், “மணலி விரைவுச் சாலையில் எர்ணாவூர் மேம்பாலம் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை எப்போதும் கன்டெய்னர்கள், கன ரக வாகனங்களை நாட் கணக்கில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் சாலை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தனியார் கன் டெய்னர் லாரிகள் நிறுத்த தனியாக நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். எர்ணாவூர் மேம்பாலம் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடை வெளியின்றி மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருச்சக்கர வாக னங்கள் எதிர்திசையில் பய ணிக்கின்றன. ஒருசிலர் இருச்சக்கர வாகனங்களை மையத்தடுப்பில் ஏற்றி இறக்கின்றனர். இதனால் சிலநேரங்களில் உயிர் பலிகூட ஏற்படுகிறது. இதை தடுக்க அந்தச்சாலையில் உள்ள ஜோதி நகர், டிகேஎஸ் நகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட 4 பேருந்து நிறுத்தங்களின் அருகிலும் சாலையை கடக்க பாதை ஏற்படுத்த வேண்டும். சிக்னல் அமைத்து போக்கு வரத்து காவலர் மூலம் போக்குவரத்தை சீர்செய்து மக்களை காக்க வேண்டும். இதற்கான பரிந்துரைகளை உரியத்துறைக்கு வழங்கப் படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, தேசிய நெடுஞ்சாலை, போக்கு வரத்து காவல்துறை சார்ந்த கோரிக்கையை உறுப்பி னர் வைத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஜன.28  அன்று கடிதம் அனுப்பப் பட்டுள்ளது என்றார்.