செங்குன்றம்,ஜன.14- புழல் மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும் தண்டனை பெற்ற 800-க்கும் மேற்பட்ட கைதிகளும் மகளிர் சிறைவளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக புழல் சிறையில் செல்போன் பயன்படுத்துவது கஞ்சா பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இதனை தடுக்கும் முறையில் சனிக்கிழமையன்று அதிகாலை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் தலைமையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் புழல் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைதிகள் உள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது. இந்த சோதனையில் செல்போன் கஞ்சா எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை தொடரும் என துணை கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்தார்.