சென்னை, மே 13- சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத்திட்டத்தின் மூலம் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மக்களின் குறைகளை கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் சனிக்கிழமை (மே 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளும் அதில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.