கள்ளக்குறிச்சி,ஜூலை 5-
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாது காக்கும் இமைகள் திட்டம் குறித்த விழப்புணர்வு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜ் தலைமை தாங்கி பேசு கையில்,“ பெண் குழந்தை களை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெ டுத்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயு தங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்யப் படும்”என்றார்.