districts

img

இரட்டை சதமடித்த தக்காளி விலை

சென்னை, ஜூலை 31-

      தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திங்களன்று (ஜூலை 31) ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது.

     தக்காளி விலை தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்வில் உள்ளது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திங்கட்கிழமை ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கிலோ 160 என இருந்த நிலையில் 40 ரூபாய் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

     இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 30 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ஒன்றின் விலை ரூ. 6 ஆயிரத்தை தாண்டுகிறது. இதன் காரணமாக நாங்களே மிகவும் சிரமத்தில்தான் தக்காளி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி இறக்குமதி குறைந்ததே விலை உயரக் காரணமாக உள்ளது. ஒரு பக்கம் நம் மாநிலத்தில் தக்காளி உற்பத்தி குறைவு, இன்னொரு பக்கம் வெளிமாநிலத்தில் இருந்து வரும் தக்காளி இறக்குமதியும் குறைவு. இதனால் தக்காளியின் விலை அதிகபட்சமாக கிலோ 200 என அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கூறுகையில், சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ள தக்காளி மற்றும் சின்ன வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எளிதில் தக்காளி வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.