districts

   தமிழ்நாடு முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பற்கான ஆயத்த பணி கள் நடைபெற்று வருகின்றன

சென்னை, ஜுன் 4-

     தமிழ்நாடு முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பற்கான ஆயத்த பணி கள் நடைபெற்று வருகின்றன. இதற் காக மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும், 6 முதல் 12ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம்  தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்  என்று முதலில் அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அறிவித்தார்.

    ஆனால் தற்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்பட வில்லை. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த  பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல்  வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த  4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவேக் காணப்படுகிறது.

   இதனால் பள்ளிகள் 7ஆம் தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளன. எனவே பள்ளிகள் திறப்பது  மீண்டும் தள்ளிப் போகுமா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும்.