districts

img

சிதம்பரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சிதம்பரம், ஜூன் 24- சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத் துறை யின் கீழ் இயங்கி வரும் அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ஆண்கள் பள்ளியில்  97 விழுக்காடும், பெண்கள் பள்ளியில் 86 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுவாமி சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை மற்றும் நந்தனார் ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகி கள் பாலைய்யா, கனகசபை, செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், ராஜேந்திரன், விமல்குமார், நெடுஞ்செழியன், தெய்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.