districts

img

தனியார் மயத்தை நோக்கிச் செல்லும் மின் உற்பத்தி நிலையங்கள் !

 நாடு ஆங்கிலேயர்களிட மிருந்து விடுதலை பெற்ற பொழுது, தேசத்தின் கட்ட மைப்பை உருவாக்க , மின்சாரம் உள்ளிட்ட துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க  வேண்டும் என சுதந்திர இந்தியாவின் மின்துறை அமைச்ச ராக இருந்த டாக்டர் அம்பேத்கர் மின்சாரத்தை பொதுப் பட்டியலில் சேர்த்தார். 1990 ல் புதிய பொருளாதாரக் கொள்கை யால், உலகமயம், தாராளமயம், தனியார் மயம் அமலாக தொடங்கிய பின்னர் மின் உற்பத்தியில் ஈடுபட தனியார்  பெருநிறுவனங்கள் அனுமதிக்கப் பட்டன. 
உழைப்பு சுரண்டல்
தனியாருக்கு சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த ஆட்சியாளர்கள், நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் குறைந்த கூலிக்கு ஒப்பந்த முறையில் இளைஞர்களை பணியமர்த்தி அவர்களின் உழைப்பை சூறை யாட தொடங்கினர். தனியார் பெரு முதலாளிகளின் நலனை  கருத்தில் கொண்டு செயல்பட்ட  ஆட்சியாளர்களும் அரசு அதிகாரி களும் தொழிலாளர் நலச் சட்டத்தை அமல்படுத்தாத முத லாளிகளை கண்டுகொள்ள வில்லை. இதுஇன்றளவும் தொடர்கிறது.
எங்கும் எதிலும் அவுட்சோர்சிங்
ஒப்பந்தம், கேசுவல், அவுட்சோர்சிங் என்ற இந்த புதிய முறைகள் அரசின் முக்கியமான துறையான மின்சாரம், போக்கு வரத்து, குடிநீர் என அனைத்து துறைகளிலும் ஊடுருவி வருகிறது. 1.4.2004 முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பென்சன் திட்டம் என்று சொல்லி ஓய்வு கால சமூக பாது காப்புத் திட்டத்தை ஒன்றிய அரசு கைக்கழுவி விட்டது. ஆட்சியில் இருந்த அதிமுக அரசு 1.4.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்கியது. இந்தச் சூழலில் தான் திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் தமிழ்நாடு மின்சார வாரியமும் தேசிய அனல் மின் உற்பத்தி கழகமும் இணைந்து 1500 மெகா வாட் மின் உற்பத்தியை துவக்கின. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை 70 விழுக்காடு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். மீதமுள்ள 30 விழுக்காடு இதர மாநிலங்களுக்கு வழங்க மத்திய தொகுப்பில் இணைக்க வேண்டும். ஆனால் இங்கு பணியாற்றும் சுமார் 2000 பேரில் ஒருவர் கூட நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை.  ஒன்றிய அரசும் இங்கு பணி யாற்றும் பொறியாளர்களை டெபுடேஷன் என்ற பெயரில் நியமித்துள்ளது.
சட்ட மீறல்
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வெளியிடப்பட்ட தமிழக அரசு ஆணை 950, நாள்  8.8.1990 படி நிரந்தரத் தன்மை வாய்ந்த இந்தப் பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தக் கூடாது என சட்டம் இயற்றிய தமிழக அரசும் கண்டு கொள்ள வில்லை. அரசு இயற்றிய சட்டத்தை அரசே மீறுவது விந்தை யிலும் விந்தை. இவர்களுக்கான பணியிடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது வேதனை அளிக்கின்ற விஷயம். வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவை சாப்பிடக் கூட இட வசதி இல்லை. தொழி லாளர்கள் பணியாற்றும் இடத்தின்  அருகில் தேநீர் வழங்க போராட வேண்டியுள்ளது.  தமிழக மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இயற்கை பேரிடர் காலங்களில் இந்த ஒப்பந்த ஊழியர்கள் தான் மின் தடையை நீக்கி மின்விநியோகத்தை வழங்கி வருகிறார்கள் என்பதை அறிந்தும் இவர்களை நிரந்தரப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பத்தாண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந் தரப்படுத்துவோம் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக அவுட்சோர்சிங் முறைக்கு செல்வது பெரு முதலாளிகளின் நலனை பாதுகாப்பதாக உள்ளது. இந்தப் போக்கை மாநில அரசு கைவிட வேண்டும்.