சென்னை,ஜன.8- பொங்கல் என்றாலே புதுப்பானை புத்தரிசி, செங்கரும்பு, மஞ்சள் குலை இவைகள் தான் நினை வுக்கு வரும். மண்பானை கிராமங்களில் மட்டுமல் லாமல் நகரத்திலும் மக்க ளிடம் மண் வாசனை மாறா மல் இடம் பிடித்துள்ளது. சென்னையில் பொங்க லுக்கு ஏராளமான மண் பானைகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட மண் பானை விற்பனை கடைகள் உள்ளன. இது தவிர தற்கா லிக நடைபாதை கடைகள் இன்னும் ஒன்றிரண்டு நாளில் தொடங்கும். கரும்பு, மஞ்சள் குலை விற்கும் பகுதிகளில் மண் பானைகளும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். நகரமய மாகி விட்டால் மக்களிடம் பாரம்பரியமான முறையில் மண் பானையில் பொங்க லிட்டு ஆர்வம் அதிகம் இருப்பதாக மண் பானைகள் மொத்த விற்பனையாளர் கோடம்பாக்கத்தை சேர்ந்த உஷா கூறினார்.