புதுச்சேரி,மே.22-
போக்சோ வழக்குகளை ஓர் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று புதுவை வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா அறிவுறுத்தினார். புதுச்சேரியில் கடலூர் சாலை யில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கம் செயல்பட்டு வருகிறது.
போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்குகளை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார். இந்நிலையில், போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைகப் பட்டுள்ளது.
இதற்கென தனி நீதி பதியும் நியமிக்கப்பட்டுள்ளார். போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா திங்களன்று (மே 22) நடந்தது. இந்த நிகழ்வில் உயர் நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதி பதி டி.ராஜா பேசுகையில், “குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதி மன்றம் திறக்கப்பட்டுள்ளது. இத னால் புதுவை மாநிலத்தில் இது 29-வது நீதிமன்றமாகவும், புது வையில் மட்டும் போக்சோ நீதி மன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்படவுள்ளன” என்றார். போக்சோ குற்றத்தில் ஈடு பட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப் படும். வழக்கறிஞர்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.
இந்த வழக்குக்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஓர் ஆண்டுக்குள் வழக்கு களை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாள வக்கீல்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தினார். முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “புதுவையில் வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தரும். விரைவான நீதி குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் இப்போது நீதி மன்றம் திறக்கப்பட்டுள் ளது.
குழந்தை களுக்கு கிடைக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும்”என்றார். முன்னதாக, நீதிமன்ற வளா கத்தில் மூன்றாவது தளத்தில், போக்சோ விரைவு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார்.
முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலை வர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், உயர் நீதிமன்ற நீதிபதி கள் வைத்தியநாதன், இளந்திரை யன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செய லர் ராஜீவ் வர்மா, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.