சென்னை, ஜன. 2 - சென்னையில் ஒரு நாள் பெய்த பெருமழையில் சூழ்ந்த வெள்ளம் 4 நாட்கள் ஆகியும் இன்னும் விடியவில்லை. சென்னை முழுவதும் முழுவதும் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் தண்ணீர் வடியாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மழை பெய்தபோது 734 இடங்களில் தண்ணீர் தேங்கியது. வெள்ளத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக ஈடுபட்டனர். மாநகராட்சி கட்டுப் ்பாட்டறைக்கு இரண்டு நாட்்களில் மட்டும் வெள்ளம் தேங்கி கிடப்பது பற்றி 2500 புகார்கள் வந்துள்ளன. அதில் ஒரு பகுதி இடங்களில் நிலைமை சீரமைக்கப்பட்டது. மகாலிங்கபுரம் 40 அடி திட்ட சாலை, வடக்கு உஸ்மான் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு, அஜிஸ்நகர் ரங்க ராஜபுரம், மேற்கு மாம்பலம்போஸ்டல் காலனி, திருவொற்றியூர் மேற்கு பகுதி, மணலி சேக்காடு, கள்ளிக் ்குப்பம், கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி, வியாசர்பாடி பள்ளத்தெரு, தி.நகர், பசுல்லா சாலை, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை ஆகிய இடங் ்களில் தண்ணீர் வடியாத நிலையில் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி இரவு - பகலாக நடக்கிறது.
வளசரவாக்கம் பகுதியில் ஆற்காடு சாலை, ஆபீசர்ஸ் காலனி, எஸ்.வி.எஸ். நகர் பிரதான சாலை, வில்லிவாக்கம் கிழக்கு மாடவீதி, சிட்கோ நகர் தெருக்கள், ரயில்வே சாலை, சூளைமேடு என்.ஜி.ஓ.காலனி, வினோபாஜிதெரு, எம்.எம்டி.ஏ.காலனி, மற்றும் புரசைவாக்கம், அயனாவரம் பகுதியில் பல தெருக்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. புழல் ஏரியில் இருந்து உபரி நீர் சுமார் 2000 கனஅடி திறக்கப் ்பட்டுள்ளது. ஏரி தண்ணீர் மட்டு மின்றி பிறபகுதிகளில் இருந்தும் கால்வா ய்க்கு தண்ணீர் வந்ததால் ஆ.முல்லைவாயில் தற்காலிக தரைப் ்பாலம் மூழ்கியது. ஐ.ஓ.சிக்கு செல்லும் இருதரை வழிப்பாலங்களும் தண்ணீரில் மூழ்கின. நெடுஞ்செழியன் தெருவில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கின்றன. எம்.எப்.எல்.சந்திப்பு அருகே உபரிநீர் கால்வாய்க்கு கரை இல்லா ததால் நிறுவன வளாகத்தை மூழ்க டித்து மணலி செல்லும் பொன்னேரி சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. சடையங்குப்பம் மேம்பாலம், மற்றும் ஊருக்கு இடையேயான மண் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.