திருவள்ளூர், ஆக.26-
விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் பல னாக ஆர்.கே. பேட்டை அருகே கல்யாணபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை திறக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வந்தனர். ஆற்றை கடந்து 3 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள சகஸ்ர பத்மா புரத் திற்கு நடந்து சென்று அத்தி யாவசிய பொருட்களை வாங்கி வந்தனர்.
இந்த சூழலில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆக-1 அன்று ஆர்.கே.பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவ லர் நஸ்ரத் பேகம் சம்பந்தப் பட்ட கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர்.
இந்நிலையில், ஆக. 25 அன்று கல்யாணபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கப்பட்டது. பொது மக்களுக்கும் பொருட்களும் வழங்கப் பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆர் கே பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் தலை மையில் வட்டாட்சியர் விஜய குமார் ரேசன்கடையை திறந்து வைத்தார். இந்நிகழ் வில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டப் பொரு ளாளர் சி.பெருமாள், ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகா கிருஷ்ணன், துணைத் தலைவர் சுபா ஷினி மேகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா குமார சாமி மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.