districts

img

சிதம்பரத்தில் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

சிதம்பரம், ஜன.8- சிதம்பரம் நகரத்தை யொட்டியுள்ள லால்புரம், பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, நான் முனிசிபல், தண்டேஸ்வர நல்லூர், உசூப்பூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்த நிலையில் லால்புரம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி அண்மையில் சந்தித்து  ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என மனு அளித்தனர்.  இதனை தொடர்ந்து தமிழக முதல்வருக்கு நகராட்சியுடன் ஊராட்சியை இணைகக்க் கூடாது என தபால் கார்டு அனுப்பும் போராட்டம் சிதம்பரம் தலைமை தபால் அலு வலகத்தின் முன்பு நடை பெற்றது.  இதில் அப்பகுதி யில் உள்ள பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவர் வி. எம் சேகர், வார்டு உறுப்பி னர்கள் தமிம்முன் அன்சாரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து லால்புரம் ஊராட்சியில் வசிக்கும் வசந்தி மற்றும் ராஜ லட்சுமி  கூறுகையில், லால்பரம் ஊராட்சியில் 400 ஏக்கருக்கு மேல் விளை நிலத்தில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பொது மக்கள் தினக்கூலி தொழி லாளர்கள் ஊராட்சியை நக ராட்சியுடன் இணைத்தால் அதிக வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் அதிகமாக மாறும் எனவே கூலி வேலை செய்யும் எங்க ளால் இதனை கட்ட முடி யாது.  எங்கள் கிரா மத்தை நகரத்துடன் இணைக்கும் இணைப்பு சாலையே கிடையாது.  எனவே தமிழக அரசு மறு  பரிசீலனை செய்து ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.