‘ஓஎம்ஆர்-நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ பெருங்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியையொட்டி ஆர்.பத்மகுமாரி எழுதிய ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ எனும் குழந்தைகளுக்கான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி நூலை வெளியிட, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ஜி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். தமுஎகச தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன், கோவில் நிர்வாகி ஏழுமலை, பாரதி புத்தகாலயம் க.நாகராஜன், தமுஎகச கிளைச்செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.