districts

img

வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிடங்கள்: கள்ளக்குறிச்சியில் அப்புறப்படுத்திய அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி,மே 29 - கள்ளக்குறிச்சி நகரில் சாலையோர வாய்க்காலை  ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி நகரில் உள்ள காந்தி சாலையின் ஒரு புறம் நாளுக்கு நாள்  வாய்க்காலை ஆக்கிரமித்து, புதிது புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டது. மேலும் அதில் கடைகள் கட்டப்பட்டு  வந்தது. ஆனால், காந்தி சாலையில் சென்று வரும் வாகனங்கள் ஆக்கிரமிப்பு கடைகள் முன்பு நிறுத்தப்படு வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதன் காரணமாக, பொதுப்பணி மற்றும் நீர்வள பாசனத் துறையினர் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங் களை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கி இருந்த னர். இந்த நிலையில், வரு வாய் துறையினர் உதவி யுடன், பொதுப்பணி மற்றும்  நீர்வள பாசன துறையி னர், பலத்த போலீஸ் பாது காப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில் புதனன்று இறங்கி னர்.

;