விழுப்புரம், நவ.30- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து கடந்த ஓராண்டாகியும் இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை. விண்ணப்பித்த தகுதியுள்ள அனை வருக்கும் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதனன்று (நவ. 30) கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது. இதற்கிடையே செவ்வாயன்று (நவ. 19) வட்டாட்சியர் தலைமையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் மனு கொடுத்தவர்களின் விவரம் கணக்கில் ஏற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மாவட்டத் தலைவர் வி. அர்ஜூனன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வட்டத் தலைவர் எம்.செல்வராஜ், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.