சென்னை, ஜூன் 23-
கோர்டேவா அக்ரிசயின்ஸ் நிறுவனம், நெல் வயல்களில் பரந்த அளவிலான அகன்ற இலைகள், புல் நிறைந்த களைகள் மற்றும் கடின வகை களைகளைக் கட்டுப் படுத்தும் நாவலெக்ட் என்னும் களைக்கொல்லி மருந்தை அறிமுகம் செய்துள்ளது.
இது நெல் விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிப்ப தோடு, மண் வளத்தையும் பாதுகாக்கிறது. இதில் உள்ள தனித்துவமான ரின்ஸ்கோர் கலவையானது நேரடி விதை அரிசி உட்பட பயனுள்ள களை மேலாண்மையில் மிகவும் சிறந்த ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மண்ணின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேம்பட்ட தயாரிப்பின் காரணமாக இந்த களைக் கொல்லியை எளிதாக பயன்படுத்தலாம். இது மாறுபட்ட வானிலை மற்றும் நீர் மேலாண்மை சூழலுக்கு ஏற்ப திறம்பட செயல்படும் ஒரு தனித்துவமான தயாரிப்பு என்று நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் ரவீந்தர் பாலன் கூறினார்.