புதுச்சேரி, நவ.8- புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் மழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (நவ.8) சட்டப்பேரவையில் நடை பெற்றது. முதல்வரும், புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சி யர் வல்லவன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பொதுப்பணித்துறை, மின் துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, கடலோர காவல்படை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணி கள் குறித்து இக்கூட்டத் தில் விரிவாக ஆலோசிக்கப் பட்டது.