தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்வு
சென்னை, அக்.10– சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாயன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிண்டி கத்திப்பாராவில் போக்குவரத்து நெரிசல்
சென்னை,அக்.10- சென்னையில் போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுவருகிறது.மேலும் ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாய் பணி கள் நிறைவடையாமல் இருப்பதால் முக்கியமான நேரங்களில் நெரிசல் ஏற்படு கிறது.இந்த நிலையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கத்திபாராவில் இருந்து கோயம்பேடு நோக்கி வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.இருசக்கரம் மற்றும் கார்கள் நகராமல் நெரி சலில் சிக்கி வாகன ஓட்டி கள் தவித்தனர்.
கூலித் தொழிலாளிக்கு ரூ.26 ஆயிரம் மின் கட்டணம்
காஞ்சிபுரம்,அக்.10- வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழி லாளியான இவர் ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின்விசிறி, டி.வி. ஆகிய வற்றை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. இந்த மின் கட்டணத்தை ”உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லைஎன்றால் மின் இணைப்பு துண்டிக்கப் படும்” என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர். இத னால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் கலைச் செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
விழுப்புரத்தில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை
விழுப்புரம்,அக்.10- வருகின்ற வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வருவாய்த்துறை, உள்ளிட்ட அனைத்து துறை யின் சார்பில் செவ்வாய் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வட்டாட்சியர் வேல்முருகன் தலைமை தாங்கினார், கூட்டத்தில் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி கலந்து கொண்டு வரு கின்ற வடகிழக்கு பருவ மழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார், கூட்டத்தில் வருவாய் துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னேற்பாடுகள் குறித்து எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர், கூட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.