districts

img

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

சென்னை, செப். 4- மணலி அவுரி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மூன்று குழந்­தைகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பாலு என்பவரின் ஒலி ஒளி அமைக்கும் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மணலி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள கோயிலில் நடைபெறும் விழாவிற்கு ஒலி ஒளி அமைக்கும் பணியில் முருகன் ஈடுபட்டார். அப்போது மின்சார பெட்டி அருகில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. பெட்டியில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் துறையினர் முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஒலி ஒளி உரிமையாளர் பாலு மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.