திருவண்ணாமலை, ஜுன் 18-
கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு, ஆக.1 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தச்சம்பட்டு கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. ஆர்.ஆரோக்கியமேரி,கே.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வி.வேலா யுதம் வரவேற்றார். கரும்பு வெட்டும் தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இ.கே.முருகன்,மாநில பொதுச் செயலாளர் சி.துரைசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.
கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு தனித்த வாரியம் அமைத்திட வேண்டும், கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடும்போது கரும்பு தோவை பட்டு தோலில் சிராய்ப்புகள் ஏற்படுவதால் பாதுகாப்புடன் கூடிய சீருடை, ரப்பர் ஷு இலவசமாக வழங்க வேண்டும், கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடும் போது விஷ பூச்சி மற்றும் பாம்பு கடித்து தொழிலாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ5 லட்சம் குடும்ப நிதியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டச் செயலாளர் சொக்க நாதன், எஸ்.ராமதாஸ் (சிபிஎம்), எம்.பிரகல நாதன், ஆர்.அண்ணாமலை (விதொச), பி.அசோகன் (விச) உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய நிர்வாகிகள்
தலைவராக ராஜா, செயலாளராக விநாயகம், பொருளாளராக ஆறுமுகம் ஆகியோர் உள்ளிட்ட 23 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.