districts

img

விவசாயிகளை சந்திக்க எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு கடலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஆக 2-

   விவசாயிகளை சந்தித்து பேசுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுத்து, தடுத்து நிறுத்தியதை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

   என்எல்சி நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு கையகப்  படுத்திய வானமா தேவி பகுதியில் ஆயி ரக்கணக்கான காவலர்களைக் கொண்டு, விவசாயிகள் நெற்பயிரை அழித்து வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து வருகிறது.

   நிலம் எடுத்து பல ஆண்டுகளாக உரிய இழப்பீடு கிடைக்காமல் பரிதவித்து வரும் விவசாயிகளை சந்திப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை வி.பி. மாலி,  கந்தர்வகோட்டை எம். சின்ன துரை ஆகியோர் சென்றனர். அப்போது, சேத்தியாதோப்பு கூட்டுச் சாலை அருகே குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவலர்கள், நிலம் கொடுத்த விவசாயி களை சந்தித்து பேசக் கூடாது என்றும் அங்கு செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் தடுத்து நிறுத்திவிட்டனர்.

    காவல்துறையின் இந்த அராஜ கத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நிலம் கொடுத்த விவ சாயிகளுக்கு நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தியும் கடலூர் ஜவான் பவன் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே. மாதவன், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், மாவட்டப் பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதுவாணன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.