சேலம், ஏப்.13- தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து, சிறு பான்மை மக்கள் நலக்குழுவினர் தேர் தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு செயல் பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப் பாக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி நாட்டில் பிரிவினையை தூண்டியுள் ளது. இதனை தடுத்திட இந்தியா கூட் டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்க ளித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்ஒரு பகுதியாக தருமபுரி மக்களவை தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு வாக்குசேகரித்து சேலம் மாவட்டம், மேட்டூரில் தேர்தல் பிரச்சாரம் நடை பெற்றது. இதில் அமைப்பின் நிர்வா கிகள் வின்சென்ட், சதீஷ்குமார், பவுல் ராஜ், ஜான், தங்கம், எஸ்.எம்.தேவி உட் பட பலர் கலந்து கொண்டனர்.